சென்னை; இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில்  கடற்பசு பாதுகாப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு  உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நமது #DravidianModel அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த முயற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகள் என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின தனது  எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தஞ்சை – புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்த பாக். வளைகுடாவில், நமது #DravidianModel அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்! இந்த முன்னோடி முயற்சியைப் பாராட்டும் தீர்மானம், அபுதாபி #IUCNWorldConservationCongress2025-க்கு முன் ஆன்லைன் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. இந்த முயற்சியில் பங்கேற்ற @tnforestdept, Omcar Foundation உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள்!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.