சென்னை: ம​காளய அமா​வாசையை முன்​னிட்டு ராமேசுவரத்​துக்கு சிறப்பு பேருந்​துகள்  பல மாவட்டங்களில் இருந்து இயக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு, பொதுமக்களின் வசதிக்காக, விடுமுறை தினங்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன்படி, பண்டிகை காலங்கள்,  வார விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்​பாக அரசு விரைவு போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் ஆர்​.மோகன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பில்,

 செப்​.21-ம் தேதி மகாளய அமா​வாசையை முன்​னிட்​டு, 20-ம் தேதி சென்​னை, சேலம், கோயம்​புத்​தூர், ஈரோடு, திருப்​பூர், பெங்​களூரு​வில் இருந்து ராமேசுவரத்​துக்​கும், 21-ம் தேதி ராமேசுவரத்​தில் இருந்து மேற்​கண்ட நகரங்​களுக்​கும் கூடு​தல் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படு​கின்​றன.

இந்த பேருந்​துகளை www.tnstc.in என்ற இணை​யதளம் மற்​றும் tnstc செயலி மூலம் முன்​ப​திவு செய்து பயணிக்க வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது. சிறப்பு பேருந்து இயக்​கத்தை கண்​காணிக்க, குறிப்​பிட்ட பேருந்து நிலை​யங்​களில் போதிய அலு​வலர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.