டெல்லி: குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலில் வெற்றிபெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. இராதாகிருஷ்ணன், நாளை (செப். 12) பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் பதவி விலகியதை தொடர்ந்து, அப்பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடார். அவரை எதிர்த்து, இண்டியா கூட்டணி சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்ஷன ரெட்டி நிறுத்தப்பட்டார். அவருக்கு, அவரது சமூக மக்கள் உள்ள ஆந்திர, தெலுங்கானா மாநில எம்.பி.க்களே வாக்களிக்க மறுத்து விட்டனர்.
இந்த நிலையில், தேர்தலில், தேர்தலில் மொத்தம் பதிவான 767 வாக்குகளில், சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதன்முலம் நாட்டின் 15-வது குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வாகி உள்ளார்.
இவர் நாளை (செப். 12) பதவியேற்க உள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைக்க உள்ளார். டெல்லியில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிர ஆளுநராக உள்ளார். குடியரசு துணைத் தலைவராக பதவியேற்கும் முன் அவர் இப்பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசு துணைத் தலைவரே மாநிலங்களவையின் அலுவல் வழி தலைவர் ஆவார். எனவே, எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவை தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் கடமையாற்றுவார்.