சென்னை: செப்டம்பர் 11ந்தேதி ஓசூரில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது சுற்றுப்பயணம் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் நகரமான ஓசூரில் நாளை மறுதினம் ( செப்டம்பர் 11ஆம் தேதி தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் 10 நாள் பயணமாக ஜெர்மனி,  இங்கிலாந்து சென்று தமிழ்நாட்டுக்கு தொழில்முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். இதையடுத்து வரும் 11ந்தேதி ஓசூரிலும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுஉள்ளது.

அதன்படி,  செப். 11ஆம் தேதி காலை 11 மணிக்கு ஒசூர் தனேஜா ஏரோஸ்பேஸ் விமான நிலையத்திற்கு தமிழக முதல்வர் 11 மணிக்கு வருகிறார். அங்கிருந்து 11:30 மணிக்கு புறப்பட்டு ஒசூர் ஆனந்த் கிராண்ட் பேலஸ் ஹோட்டலில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.

தொடர்ந்து பிற்பகல் 1 மணி அளவில் ஒசூர் எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் அமைய இருக்கும் அசண்ட் சர்க்யூட் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பிற்பகல்  2 மணிக்கு ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினரும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான ஒய். பிரகாஷ் வீட்டுக்கு சென்று ஓய்வு எடுக்கிறார்.

மாலை 4 மணிக்கு சூளகிரி பேருந்து நிலைய பகுதியில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.

மாலை 6 மணிக்கு குருபரப்பள்ளியில் உள்ள டெல்டா நிறுவனத்தில் புதிய தொழிற்சாலையை தொடங்கி வைக்கிறார். பிறகு கிருஷ்ணகிரி டோல்கேட் பகுதியில் நடைபெறும் ரோடு ஷோ வில் பங்கேற்கிறார்

. இரவு பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் மதியழகன் வீட்டில் தங்குகிறார்.

செப்.12ஆம் தேதி காலை 10:30 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்லூரியில் நடைபெறும் விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்வர் அவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார்.

விழா முடிந்ததும் காலை 11:30 மணிக்கு ஒசூர் விமான நிலையம் வந்து அங்கிலருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.