டெல்லி: மத்தியஅரசு வழக்கும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழ்நாட்டில் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு ஆசிரியர் உள்பட நாடு முழுவதும் 45 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில்  உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் சென்னை மயிலாப்பூர் தனியார் பள்ளி ஆசிரியை ரேவதி,  புதுச்சேரியில் தில்லையாடி வள்ளியம்மை அரசுப் பள்ளி ஆசிரியர் ராதாகிருஷ்ணனும் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதி தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்தியஅரசு,  நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றி வரும், 45 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இந்த ஆண்டு தேசிய விருதுக்கு தேர்வான 45 ஆசிரியர்கள் அடங்கிய பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது. அதில், திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு உயர்நிலைப் பள்ளி சமூக அறிவியல் ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் சென்னை மயிலாப்பூர் PS செகண்டரி பள்ளி முதல்வர் ரேவதி பரமேஸ்வரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக ஆசிரியை விஜயலட்சுமிக்கு அவரது குடும்பத்தினர் இனிப்புகளை ஊட்டி மகிழ்ந்தனர். அளித்த மயிலாப்பூர் PS செகண்டரி பள்ளி முதல்வர் ரேவதி பரமேஸ்வரன், உங்களின் உயர்ந்த கனவுகளை நோக்கி ஓடினால், விருதுகளும், கவுரமும் உங்களைத் தேடி வரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.