சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7-வது ஆண்டு நினைவு தினமான ஆக.7-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி சென்றுக்கொண்டிருக்கின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 7வது நினைவுநாளையொட்டி, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் வரையில் தி.மு.க. சார்பில் அமைதி பேரணி தொடங்கியது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பேரணியாக செல்கின்றனர்.

இந்த பேரணி பின்னர் வாலாஜா சாலை வழியாகச் சென்று காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடம் செல்கிறது. அங்கு கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
முன்னதாக ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதிநிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,. அங்கிருந்த கருணாநித உருவப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பேரணியாக செல்கின்றனர்.
