சென்னை: கல்வி உரிமை சட்டம், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என மத்திய பாஜக அரசுக்கு தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ஒதுக்க மறுத்து வருவதை ஒபிஎஸ் கடுமையாக சாடியுள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஒபிஎஸ் தனிமரமாக இருக்கிறார். இவரை அதிமுகவில் சேர்க்க எடப்பாடி மறுத்து வரும் நிலையில், பாஜக மூலம் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாக முயற்சி மேற்கொண்டார். ஆனால், மத்திய பாஜக இவரை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து, சமீபத்தில் தூத்துக்குடி வந்த பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால் ஒபிஎஸ் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்க பிரதமல் தரப்பில் மறுக்கப்பட்டு விட்டது. இதனால் கடும் கோபத்தில் இருக்கிறார் ஒபிஎஸ். தனிமரமாக இருக்கும் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் மூலம் திமுக அணிக்கு தாவலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், மத்திய பாஜக அரசை கடுமையாக சாடி அறிக்கை விட்டுள்ளார்.
சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 2024-2025 ஆம் ஆண்டுக்கான ரூ.2,151 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்காதது கடும் கண்டனத்திற்குரியது, கல்வி உரிமைச் சட்டத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை பயிலும் குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்தல், மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தல், அனைத்து குழந்தைகளுக்கும் சம வாய்ப்பினை வழங்குதல், சமூக மற்றும் பாலின இடைவெளிகளைக் குறைத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சமக்ரா சிக்ஷா திட்டம் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் மத்திய அரசின் பங்கு அறுபது விழுக்காடு எனவும், மாநில அரசின் பங்கு நாற்பது விழுக்காடு எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சமக்ரா சிக்ஷா நிதி குறித்து அண்மையில் மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, தமிழ்நாடு அரசு முன்மொழிக் கொள்கையை பின்பற்றாததன் காரணமாக 2024-2025 ஆம் ஆண்டு சம்கரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய 2,151 கோடி ரூபாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.