நெல்லை
யாராலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை விழுங்க முடியாது என அக்கட்சியின் துணை பொதுச் செயலர் வன்னியரசு கூறி உள்ளார்.

அடுத்த வருடம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று முன்தினம் தஞ்சாவூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டபோது அவர் ”விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக விழுங்கிவிடும்” எனக் கூறினார்.
இதையொட்டி நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு செய்தியாளர்களிடம்,
“இந்தியா கூட்டணி என்பது விடுதலைச் சிறுத்தைகளின் கடும் முயற்சியால் உருவானது , விடுதலை சிறுத்தைகள் கட்சியை யாராலும் விழுங்க முடியாது. எடப்பாடி பழனிச்சாமி பாஜகவின் அசைன்மென்ட் காரணமாக இவ்வாறு பேசுகிறார்:
என விமர்சித்தார்.