சென்னை: முதல்வர் ஸ்டாலின் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பல்வேறு பரிசோதனை மேற்கொள்வதற்காக தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார்.
தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து, அரசி மற்றும் கட்சி பணிகளை மேற்கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலின், நேற்று காலை கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அரசு நிகழ்ச்சிக்காக தனது தொகுதியான கொளத்தூருக்கு சென்றுகொண்டிருந்தபோது திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. ஏற்கவே காலை நடைப்பயிற்சிக்குச் சென்றபோது தலைசுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு மீண்டும், தலைசுற்றல் ஏற்பட்டதால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் அவர் சில நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தினர். இதையடுத்து, அங்கு அனுமதிக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் இன்று சில பரிசோதனைகளுக்காக தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார். அங்கு அவருக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.