டெல்லி: 2025-26-ம் கல்வி ஆண்​டில் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்கு மாணவர் சேர்க்​கைக்​கான கலந்​தாய்வு ஆன்லைனில் வரும் 21-ம் தேதி தொடங்​கு​கிறது என மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  முதற்கட்டமாக அகில இந்திய இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் ஏற்கனவே வெளியான நிலையில்,  மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு எப்போது தொடங்கும் என மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில்,  மருத்துவ ஆலோசனைக் குழு (MCC), 2025 ஆம் ஆண்டுக்கான NEET UG கவுன்சிலிங் அட்டவணையை அறிவித்துள்ளது. அதன்படி, அதற்கான ஆன்லைன்  பதிவு ஜூலை 21 ஆம் தேதி தொடங்குகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாநில ஒதுக்கீட்டு கவுன்சிலிங்கின் முதல் சுற்று ஜூலை 30ஆம் தேதி தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் கவுன்சிலிங்கிற்கான குறிப்பிட்ட தேதிகள், தகுதிப் பட்டியல் தயாரிப்பு உட்பட, இறுதி செய்யப்பட்டு வருவதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து மருத்துவ ஆலோசனைக் குழு (MCC), வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், இளநிலை மருத்துவ படிப்புக்கான எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான முதல் சுற்று கலந்​தாய்வு https://mcc.nic.in  (Medical Counselling Committee (MCC)) என்ற இணை​யதளத்​தில் ஜூலை 21-ம் தேதி தொடங்​கு​கிறது.

நீட் தேர்​வில் தகுதி பெற்ற மாணவ, மாணவி​கள் இந்த இணை​யதளத்​தில் வரும் 21-ம் தேதி முதல் 28-ம் தேதி நண்​பகல் 12 மணிக்​குள் பதிவு செய்யவேண்​டும். 28-ம் தேதி பிற்​பகல் 3 மணி வரை கட்​ட​ணம் செலுத்தலாம். 22-ம் தேதி முதல் 28-ம் தேதி நள்​ளிரவு 11.55 மணி வரை இடங்​களை தேர்வு செய்​ய​லாம்.

தரவரிசை பட்​டியல் அடிப்​படை​யில் 29, 30-ம் தேதி​களில் கல்​லூரி​களில் இடங்​கள் ஒதுக்​கப்​படும். அதன் விவரங்​கள் 31-ம் தேதி வெளி​யிடப்​படும். டஒதுக்​கீடு பெற்ற கல்​லூரி​களில் ஆகஸ்ட் 1 முதல் 6-ம் தேதிக்​குள் சேர வேண்​டும். சான்​றிதழ் சரி​பார்ப்பு பணி​கள் ஆகஸ்ட் 7, 8-ம் தேதி​களில் நடை​பெறும்.

2-ம் சுற்று கலந்​தாய்வு ஆகஸ்ட் 12-ம் தேதி​யும், 3-ம் சுற்று கலந்​தாய்வு செப்​டம்​பர் 3-ம் தேதி​யும் தொடங்​கும். 3 சுற்று கலந்​தாய்வு முடி​வில் காலி​யாக உள்ள இடங்​களை நிரப்​புவதற்​கான கலந்​தாய்வு செப்​டம்​பர் 22-ம் தேதி தொடங்​கும்.

புனே ராணுவ கல்​லூரி​யில் உள்ள பிஎஸ்சி நர்​சிங் படிப்​புக்கு நீட் தேர்வு மதிப்​பெண் அடிப்​படை​யில் மாணவர் சேர்க்கை நடை​பெறு​வ​தால், அந்த இடங்​களுக்​கும் மேற்​கண்ட தேதி​களில் கலந்​தாய்வு நடை​பெறும்.

இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

மாநில கலந்தாய்வு: தமிழகத்​தில் உள்ள அரசு மருத்​துவ கல்​லூரி​களில் இருக்​கும் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் இடங்​களில் 15 சதவீதம் அகில இந்​திய ஒதுக்​கீட்​டுக்கு ஒதுக்​கப்​படு​கிறது. மீத​முள்ள 85 சதவீத இடங்​கள், தனி​யார் மருத்​துவ கல்​லூரி​களில் உள்ள அரசு மற்​றும் நிர்​வாக ஒதுக்​கீட்டு இடங்​களுக்​கான மாணவர் சேர்க்கை கலந்​தாய்வு இந்த மாதம் இறு​தி​யில் தொடங்​க​வுள்ளது.

தமிழ்நாட்டில்,  மொத்​த​முள்ள 11,350 மருத்​துவ இடங்​களுக்கு நீட் தேர்​வில் தேர்ச்சி பெற்ற 62 ஆயிரத்​துக்​கும் மேற்பட்ட மாணவர்கள் விண்​ணப்பித்​துள்​ளனர். விண்​ணப்​ப​தா​ரர்களின் நீட் மதிப்​பெண்களை மத்திய அரசிடமிருந்து பெற்று அதன் அடிப்​படை​யில் தரவரிசை பட்​டியல் தயாரிக்​கப்​படு​கிறது. விரைவில் தரவரிசை பட்​டியல் வெளி​யிடப்​பட​வுள்​ளது.