சென்னை: தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துங்கள் ‘உடன்பிறப்பே வா’ ஆய்வில் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை முடுக்கி விட்டள்ளார். அதன் தொடர்ச்சியாக, அவ்வப்போது மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய, பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில், திமுக முக்கிய நிர்வாகிகளை நேரில் அழைத்தும் ஆலோசித்து வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு உடன்பிறப்பே வா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி மூலம் தினமும் 3 சட்டசபை தொகுதிகளை சார்ந்த ஒன்றிய நகர பேரூர், பகுதி கழக செயலாளர்கள் மண்டல பொறுப்பாளர்கள் ஆகியோரை அழைத்து தனித்தனியாக தொகுதி நிலவரங்களை கேட்டறிகிறார்.
அதப்டி, இன்று கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, குன்னூர் ஆகிய சட்டசபை தொகுதிகளை சார்ந்த நிர்வாகிகளை அழைத்து ஆலோசித்தார். கட்சி நிர்வாகிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்றும் கேட்டறிந்தார். அப்போது, ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கத்தை வலுப்படுத்தவும் திமுக உறுப்பினர் சேர்க்கையை மேலும் தீவிரபடுத்தவும் கேட்டுக்கோண்டார்.
அந்த வகையில் இன்று கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, குன்னூர் ஆகிய சட்டசபை தொகுதிகளை சார்ந்த நிர்வாகிகளை அழைத்து ஆலோசித்தார். இதில் தொகுதிகளின் வெற்றி நிலவரம் எந்த வகையில் உள்ளது. கட்சி நிர்வாகிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்றும் கேட்டறிந்தார். திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறதா? துண்டு பிரசுரங்கள் கொடுக்கிறீர்களா? என்றும் கேட்டறிந்தார். மேலும் தேர்தலுக்கான பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.
ஏற்கdவே ஏற்கனவே 36 தொகுதிகளை சார்ந்த நிர்வாகிகளிடம் தொகுதி நிலவரங்களை கேட்டறிந்துள்ள நிலையில் இன்று மேலும் 3 தொகுதி நிலவரங்களை கேட்டறிந்துள்ளார்.