துரை

துரை உயர்நீதிமன்றம் ஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 498 மீனவர்களும், நெல்லை மாவட்டத்தில் இருந்து 78 மீனவர்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 72 மீனவர்களும் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 3 மீனவர்களும், என மொத்தம் தமிழகத்தைச் சேர்ந்த 651 மீனவர்கள் தற்போது ஈரானில் சிக்கித் தவிக்கிறார்கள்.

போர்ச் சூழல் காரணமாக அங்கு அதிகரிப்பதால் அவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதோடு, தமிழகத்துக்குத் திரும்ப முடியாமல் உள்ளனர் எனவும் அவர்களை பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கும் தேவையான தூதரக நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்னர் கடிதனம் எழுதினார்.

ஈரானில் சிக்கியிருக்கு மீணவர்களை மீட்க ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணை மதுரைகிளை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றபோது விசாரணையில், ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்டு அழைத்துவர மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரைக்கிளை உயர்நீதிமன்ற தள்ளுபடி செய்தது. ஈரானில் இருக்கும் மீனவர்கள் அங்கிருக்கும் தூதரகத்தை அணுகி உரிய நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு தெரிவித்துள்ளது.