சென்னை: பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளியிடக் கூடாது  உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றம் பல முறை அறிவுறுத்தி உள்ள நிலையில்,  தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளியிடக் கூடாது என்ற உச்சநீதிமன்ற ஆணையை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழகக் காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவான சிறுமி மீதான  பாலியல் வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி குற்றம் சாட்டப்பட்ட நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவானது நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் இருப்பது தெரியவந்தது. பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிடக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டிய நீதிபதி,  இதுதொடர்பாக காவல்துறைக்கு பல முறை அறிவுறுத்தியும்,  இதனை அதிகாரிகள் பின்பற்றுவதே இல்லை என அதிருப்தி தெரிவித்தார்.

இதுதொடர்பாக காவல்துறையினருக்கு அறிவுறுத்த டிஜிபி, மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, உச்சநீதிமன்ற ஆணையை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை: வழக்கை விசாரிக்க சிறப்பு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றியது சென்னை உயர்நீதிமன்றம்…

அண்ணாநகர் சிறுமி பாலியல் விவகாரம்: வாக்குமூல வீடியோ பொதுவெளியில் வெளியானது குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க நீதிபதிகள் உத்தரவு