பெரியநாயகி திருக்கோயில், நடப்பூர், கங்களாஞ்சேரி , திருவாரூர்

பொது தகவல் :
இக்கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. பொம்மியம்மாள் மற்றும் வெள்ளையம்மாளுடன் மதுரை வீரன், வலம்புரி விநாயகர், பெரியநாயகி அம்மன், சப்தகன்னியர்கள் அதி மூல ஐயனார் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். பிரகாரத்தில் விநாயகர், முருகன், பூரணை புஷ்பகலாவுடன் ஐயனார், பலிபீடம் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.
தலபெருமை :
சோழர் காலத்தில் கோயில்கள் கட்டும்போது எல்லை தெய்வமாக அமைந்துள்ளது. பலருக்கும் குல தெய்வமாக விளங்குகிறது.
தல வரலாறு :
முற்காலத்தில் வயல்வெளிகளில் திருட்டு அதிகமானதால் அப்பகுதியினர் காவல்தெய்வாக வழிபட்டனர். பிற்காலத்தில் பலருக்கு குலதெய்வமாக விளங்கியது. முதலில் கீற்றுக் கொட்டகையில் இருந்தது தற்போது புதிதாக கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடந்தது.
திருவிழா :
ஆடி மாதம், சிவராத்திரி, பவுர்ணமி. சித்திரை விழா மற்றும் வைகாசியில் கஞ்சி வார்த்தல்.
சிறப்பம்சம் :
இங்குள்ள அம்மன் வடக்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பு.
இருப்பிடம் :
திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை சாலையில் கங்களாஞ்சேரி பஸ் நிறுத்தத்தில் இறங்கி நாகூர் சாலையில் சென்று, கல்யாண இருாப்பு என்ற கிராமத்தில் இருந்து தெற்கே 2 கி.மீ தொலைவில் கோயில் உள்ளது. திருவாரூரில் இருந்து 13 கி.மீ.
பிரார்த்தனை :
திருமணதடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், தீராத நோய் தீரவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன் :
மூலவருக்கு அபிஷேகம் செய்து பொங்கலிட்டும் உயிராடன் கோழி, ஆடு செலுத்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.