னாஜி

கோவா அர்சு மருத்துவமனையில் அமைச்சர் அடாவடி செய்ததை எதிர்து மருத்துவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்

கோவா மாநில சுகாதார துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் திடீர் சோதனை நடத்திய போது கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ருத்ரேஷ் குட்டிக்கர் நோயாளிகளிடம் கடுமையாக நடந்து கொண்டதாக கூறி, திட்டியதோடு அவரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் உத்தரவிட்டார்.

பத்திரிகையாளர் ஒருவரின் தாய்க்கு அவசர சிகிச்சை பிரிவில் வைட்டமின் பி 12 ஊசி போட மறுத்த ஒரே காரணத்துக்காகவே அமைச்சர் இப்படி நடந்து கொண்டதாக மருத்துவர்கள் சங்கம் தெரிவித்தது.  கோவா அமைச்சரின் இந்த அடாவடியை கண்டித்து கோவா மருத்துவ கல்லூரி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சஸ்பெண்ட் உத்தரவை கோவா முதல்வர் பிமோத் சாவந்த் நிறுத்தி வைத்துள்ளார். நேற்று அமைச்சர் ரானே எக்ஸ் தளத்தில் தாம் பேசிய கடுமையான வார்த்தைகளுக்காக டாக்டர் குட்டிகரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பதிந்துள்ளார்., அவரது மன்னிப்பை ஏற்க டாக்டர் குட்டிகர் மறுத்துவிட்டார்.