டெல்லி

ரும் ஜீலை 21 அன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை நாடாளுமன்றம் கூட்டப்படுவது வழக்கமாகும் இதில் ஆண்டு துவக்கத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இரு பாகங்களாக நடத்தப்படும். இத்தொடரில் ஜனாதிபதி உரை, பட்ஜெட் தாக்கல், நிறைவேற்றம், மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், நிதி மசோதா உள்ளிட்டவை இடம்பெறும்.

இரண்டாவதாக மழைக்கால கூட்டத்தொடர், மூன்றாவதாக குளிர்கால கூட்டத்தொடர் ஆகியவை இரண்டிலுமே பெரும்பாலும் மசோதாக்கள் நிறைவேற்றம் உள்ளிட்ட அரசு அலுவல்களே பிரதானமாக இடம்பெறும்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். ஏற்கனவே ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை இந்த மாதமே கூட்டும்படி எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.