சென்னை

ரும் மே 31 மற்றும் ஜூன் 2 ஆகிய இரு நாட்களுக்கு கும்மிடிபூண்டி ரயில்சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

”பொன்னேரி – கவரைப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மே 31, ஜூன் 2 தேதிகளில் 19 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

காலை 11.15 மணி முதல் மாலை 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை – கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

பயணிகள் வசதிக்காக மே 31, ஜூன் 2 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் – பொன்னேரி, மீஞ்சூர் இடையே 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் ”

என அறிவிக்கப்படுள்ளது.