குற்றாலம்
வெள்ளம் காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க 5 நாட்களாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிய நிலையில், தமிழகத்திலும் தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களி; பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் 4 நாட்களுக்கு முன்னர் இரவில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
நேற்று காலையிலும் குற்றாலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை விட்டு விட்டு பெய்ததால் அருவிகளில் தண்ணீர் பாதுகாப்பு ஆர்ச்சை தாண்டி ஆர்ப்பரித்து விழுந்தது.. எனவே அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது.
இன்றும்தொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிக்கத் தடையை 5வது நாளாக தென்காசி மாவட்ட நிர்வாகம் நீட்டித்துள்ளது.