சென்னை; ரூ.80 கோடியில் பிரம்மாண்ட மாற்றங்களுடன் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர்கோட்டம் இம்மாத இறுதியில் முதலமைச்சர் ஸ்டாலினால் திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வள்ளுவர் கோட்டை நவீன முறையில் புணரமைக்கும் பணிகள் இறுதிக் கட்டததை எட்டியுள்ள நிலையில், விரைவில் பொதுமக்களின் பார்வைக்காக மீண்டும் வள்ளுவர் கோட்டம் திறக்கப்பட இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை நகரின் அடையாளங்களுள் ஒன்றாக திகழ்ந்து கொண்டிருக்கும் நினைவு சின்னங்களுல் நுங்கம்பாக்கம் பகுதயில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டமும் ஒன்று. திருக்குறளை இயற்றிய தமிழ்ப் புலவர் திருவள்ளுவரை போற்றும் விதமாக, சென்னை நகரின் மத்திய பகுதியான நுங்கம்பாக்கம் – கோடம்பாக்கம் நெடுஞ்சாலை சந்திப்பில், 5 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் அடையாளமாக சுமார் 50 ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது வள்ளுவர் கோட்டம்.
இது கடந்த 1976ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது, வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைத்தார். திருவாருர் தேரை பிரதிபலிக்கும் விதமாக சிற்ப வேலைபாடுகளுடன், கல்லால் செதுக்கப்பட்ட சிற்பத்தேரில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இங்கு 3,000 பேர் அமரும் வகையிலான அரங்கமும், இந்த அரங்கத்தின் மேல் பகுதியில் குறள் மணிமாடம் ஒன்றும் உள்ளது. அதில் 1300 குறல்களும் கற்பலகைகளில் செதுக்கிப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு புகழ்பெற்ற வள்ளுவர்கோட்டம் கடந்த ஆட்சியாளர்களால் முறையாக பராமரிக்கப்படாத நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ரூ.80 கோடி செலவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுகஅரசு உத்தரவிட்டது.
அதன்படி, வள்ளுவர்கோட்டம் புணரமைக்கும் பணிகள் 2024 ஜனவரியில், 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான பணியில் 270 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். புணரமைக்கும் பணிகள் இறுதிக் கட்டததை எட்டியுள்ள நிலையில், இம்மாத இறுதியில் பொதுமக்களின் பார்வைக்காக மீண்டும் வள்ளுவர் கோட்டம் திறப்பு விழா காண இருக்கிறது.

புணரமைக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தில் உள்ள வசதிகள் விவரம்:
வள்ளுவர் கோட்டத்திற்கு புதிய அடையாளம் கொடுக்கும் நோக்கில், வளாகத்தில் உள்ள கல் தூண்கள் முதல் பூங்கா வரை ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒலி ஒளி காட்சி..
திருவள்ளுவர் சிலையை தாங்கி நிற்கும் சிற்பத்தேரில் ஒளி ஒலி நிகழ்ச்சி நடத்திடும் நோக்கில் பணிகள் நடைபெற்றுள்ளன. மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை போன்று இனி இங்கும் ஒளி ஒலி நிகழ்ச்சியை பார்த்து ரசிக்கலாம்..
புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தில் 20,000 சதுர அடி பரப்பளவிலான அரங்கத்தில் 1,600 பேர் அமரக்கூடிய வகையில் குளிர்சாதன வசதியுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதே போல கோடம்பாக்கம் நெடுஞ்சாலையின் முகப்பில் உள்ள தோரணவாயிலில் இசை நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது.
புதிய உணவகத்தில் (cafeteria) திருக்குறள் வசனங்களுடன் கூடிய திரைச்சீலைகள் மற்றும் அழகான விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.