சென்னை

மிழக அரசு பிரதமர் கிசான் திட்டத்தில் போலி செயலி உலவுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாட்ஸ்அப்பில் பிரதமரின் கிசான் யோஜனா திட்டத்தில் பதிவு செய்யுங்கள் என்ற பெயரில் ஒரு செயலியை குறிப்பிட்டு அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. பலரும் இதனை உண்மையென நம்பி பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் அது போலியான செயலி என்றும் அதை யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில்,

“பிரதமரின் கிசான் திட்டத்தில் இணைய pmkisan.gov.in என்ற இணையதளம் அல்லது தேசிய தகவல் மையம் கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டுள்ள ‘PMKISAN Gol’ என்ற செயலியைக் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து பதிவு செய்யலாம். வாட்ஸ் அப்பில் பகிரப்படும் ‘APK’ செயலி போலியானது. அதைப் பதிவிறக்கம் செய்பவர்களின் கைப்பேசி முடக்கம் (‘ஹேக்’) செய்யப்பட்டு வங்கி கணக்கில் உள்ள பணம் மற்றும் தகவல் திருடப்படும் அபாயம் உள்ளது’

என எச்சரித்துள்ளது.