திருச்சி

விசிக தலைவர் திருமாவளவன் டிரம்ப் போர் நிறுத்தம் குறித்து அறிவித்ததை விமர்சித்துள்ளார்,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களிடம்,

“பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை கட்சி வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் ஆதரித்தோம். ஆனாலும் இந்தியா-பாகிஸ்தான் இடையே பெரிய அளவிலான போர் மூண்டுவிடக் கூடாது எனவும் வலியுறுத்தினோம்.

இந்த சூழலில் போர் நிறுத்தம் தொடர்பான தகவல் ஆறுதலை தருகிறது. ஆனால் அந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. இந்த அறிவிப்பை இந்திய அரசு அல்லது பாகிஸ்தான் அரசு செய்திருக்க வேண்டும்.

இருப்பினும் அமெரிக்கா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதை நாம் வரவேற்கிறோம். இரண்டு நாடுகளுக்கு இடையில் அமைதியும், சமாதானமும் நிலவ வேண்டும் என ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் விரும்புகிறோம்.”

என்று தெரிவித்துள்ளார்.