டெல்லி
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் அப்பாவிகளை தாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார்

கடந்த மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையொட்டி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது.
பாகிஸ்தான் இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து நடத்திய இந்த தாக்குதலில் காஷ்மீரில் பொதுமக்கள் 16 பேர் பலியானார்கள். இந்தியாவ்ய்ம் பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர்,
”பாகிஸ்தான் ராணுவம் அப்பாவிகளை தாக்கி வருகிறது. பாகிஸ்தானின் ராணுவ நிலைகளை மட்டுமே இந்தியா தாக்கி வருகிறது; பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்தியா தகுந்த பதிலடி தரும். இந்தியா வரம்பை மீறாது. நிதானமான, பொறுமையான அணுகுமுறைகளை இந்தியா கையாள்கிறது.
எனத் தெரிவித்துள்ளார் .