டெல்லி

ஹலகாம் தாக்குதல் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே ;பிரதமர் மோடி மீடு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீரில்  நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குகு உரிய பதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாதிகளுக்கு கனவில்கூட  நினைத்துப்பார்க்க முடியாத தண்டனை பெற்றுத்தரப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவம் ஒருபுறம் மேற்கொண்ட நிலையில், பயங்கரவாதிகளுக்கு பின்னணியில் இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா அதிரடியாக அறிவித்தது.

பஹல்காம் தாக்குதல் குறித்து ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,

”பாகிஸ்தானுக்கு எதிராக அரசு எடுக்கும் எல்லா நடவடிக்கைக்கும் காங்கிரஸ் துணை நிற்கும். பஹல்காம் தாக்குதல் நடக்கப்போவதாக பிரதமர் மோடிக்கு 3 நாட்களுக்கு முன், புலனாய்வு தகவல் கொடுக்கப்பட்டது.

முன்னரே அறிந்ததால்தான் காஷ்மீர் பயணத்தை பிரதமர் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதனை நான் செய்திதாளில் படித்து அறிந்துகொண்டேன். பிரதமர் தனது உயிருக்கு கொடுக்கும் மதிப்பை சுற்றுலா பயணிகளின் உயிருக்கு ஏன் கொடுக்கவில்லை, காஷ்மீரில் பாதுகாப்பை ஏன் பலப்படுத்தவில்லை?

என வினா எழுப்பி உள்ளார்.