சென்னை:   மாநில தலைவர் சென்னையில், வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்திற்கு இதுவரை 1.49 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை உள்பட பல்வேறு மாநகரங்களில் குழாய் மூலம் வரி வாயு வழங்கும் திட்டம் செயல்பாட்டில்  உள்ளது.  வரும் 2032-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் வழித் தடம் மூலம் எரிவாயு விநியோகம் செய்யப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சென்னையில்   வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தில், இதுவரை 1.49 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் கிடைக்கும் மூலப் பொருளில் இந்த எரிவாயு தயாரிக்கப்படுகிறது. பல மாநிலங்களில் வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது. இந்தக் குழாய் வழித்தடம் பூமிக்கடியில் அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழலை பாதிப்பதில்லை. அத்துடன், சமையல் எரிவாயு சிலிண்டரை விட விலை குறைவு. தமிழகத்தில் குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி உள்ளது.

தமிழ்நாட்டில் இதற்கான ஆணை  திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் துறைமுக வளாகத்தில்  அமைக்கப்பட்டுள்ளது.  இந்தியன் ஆயில் நிறுவனம் எல்என்ஜி எனப்படும் திரவநிலை இயற்கை எரிவாயு முனையம் அமைத்துள்ளது. இதற்கு வெளிநாடுகளில் இருந்து எரிவாயு எடுத்து வரப்படுகிறது.

இது வாகனங்களுக்கு சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவாகவும், வீடுகளுக்கு பிஎன்ஜி எனப்படும் குழாய் வழித் தடத்தில் இயற்கை எரிவாயுவாகவும் விநியோகம் செய்யப்படுகிறது.ஹ

அதன்படி,   தமிழகம் முழுவதும் 2.30 வீடுகளுக்கு குழாய் வழித் தடத்திலும் 2,625 சிஎன்ஜி முனையங்கள் மூலமாக வாகனங்களுக்கும், இயற்கை எரிவாயு விநியோகிக்க ஏழு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது. அந்நிறுவனங்கள் மாநிலம் முழுவதும் வீடுகளுக்கு இயற்கை எரிவாயுவை விநியோகிக்க பூமிக்கு அடியில் பைப் லைன் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

இதற்கான பணிகள் சென்னை,   சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகை  போன்ற மாவட்டங்களில் சில பகுதிகள் தவிர நகர்ப்புற பகுதிகளில், குழாய்கள் பதிக்கப்பட்டு,   வீடுகளுக்கு  நேரடியாகஇ, குழாய் வழித் தடத்தில் எரிவாயு விநியோகம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதற்கான முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், சென்னையில்  இதுவரை 1.47 லட்சம் வீடுகளில் குழாய் மூலம் எரிவாயு வாங்க  பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தற்போதுவரை  12,500 வீடுகளுக்கு குழாய் வழித் தடத்தில் எரிவாயு விநியோகம் செய்யப்படுகிறது. வரும் 2032-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு! மத்தியஅரசு அனுமதி