டெல்லி: 2024ம் ஆண்டு நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, தேசிய மருத்துவ ஆணையம் 14 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்தது, மேலும் 26 மாணவர்களை இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டது. நாட்டின் மருத்துவக் கல்வியின் உச்ச ஒழுங்குமுறை அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம் (NMC) இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு NEET UG வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வரும் நிலையில், கசிந்த வினாத்தாள்களைத் தீர்ப்பது மற்றும் தேர்வின் போது பிற வேட்பாளர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்வது போன்ற நியாயமற்ற செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 250க்கும் மேற்பட்ட MBBS மாணவர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக முறைகேடுகளில் ஈடுபட்ட, 2024-25 கல்வியாண்டுக்கான 14 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்து தேசிய மருத்துவ ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டது. நீட் தேர்வு எழுதிய 215 தேர்வர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. விதிமீறல்களுக்கு உடந்தையாக இருந்த 26 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் முறைகேடுகளில் ஈடுபட்ட 42 பேர் மறுதேர்வு எழுத 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு நீட் தேர்வு எழுதிய 215 தேர்வர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
2025-26 கல்வியாண்டுக்கான நீட் தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் நாளை நடைபெறும் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.