சென்னை

ன்று மாலை அதிமுக செயற்குழுக் கூட்டம் கூட உள்ளது.

விதிப்படி இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 2 முறை செயற்குழு கூட்டத்தையும், ஒரு முறை பொதுக்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும். இதையொட்டி அதிமுக செயற்குழு கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது.

மேலும் இந்த கூட்டத்திற்கு அவை தலைவர் தமிழ் மகன் உசேனும்  தலைமை தாங்குகிறார்.  கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநில கழக செயலாளர்கள், கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள், மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.

இது பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைந்த பின் நடத்தப்படும் முதல் செயற்குழு என்பதால் இந்த செயற்குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில் 15க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபடவுள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவுடனான கூட்டணி குறித்து செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்கவுள்ளதாகவும், கூறப்படுகிறது.