சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மே 1ந்தேதி முதல் ஜூன் 1ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆண்டுதோறும் கோடை விடுமுறையையொட்டி, உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றங்களுக்கும் விடுமுறை விடப்படுகிறது. அதுபோல சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 1 மாதம் கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. அதன்படி, மே1 ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், கோடை விடுமுறை காலத்தில், அவசரகால வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீதிபதிகள் மாலா, அருள் முருகன், விக்டோரியா கெளரி ஆகியோர் மே 7, 8 தேதிகளில் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள் என்றும், நீதிபதிகள் சுவாமிநாதன், லட்சுமி நாராயணன், நிர்மல் குமா ஆகியோர் மே 14, 15, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும், நீதிபதிகள் செந்தில் குமார் ராமமூர்த்தி, சத்திய நாராயணா பிரசாத், திலகவதி ஆகியோர் மே 28, 29 ஆகிய தேதிகளிலும் விசாரிபபர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் மதுரைக் கிளையில் நீதிபதிகள் தண்டபாணி, சக்திவேல், பாலாஜி, ஜோதிராமன், வேல் முருகன், ராமகிருஷ்ணன், ராஜசேகர், ஸ்ரீமதி, விஜயகுமார், வடமலை, ஆனந்த் வெங்கடேஷ், ஷமீன் அகமதி, பூர்ணிமா ஆகியோர் விடுமுறைக்கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.