சென்னை

மிழக காவல்துறை பெண்கள் பாதுகாப்புக்காக புதிய ரோபோட்டிக் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

சென்னை மாநகர காவல்துறை  எக்ஸ் தளத்தில்,

”சென்னை பெருநகரில் பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய , சென்னை பெருநகர காவல் துறையினரால் ”ரெட் பட்டன்- ரோபோட்டிக் காப்’ என்ற புதிய பாதுகாப்பு சாதனம் தற்போது சென்னை நகரின் முக்கியமான 200 இடங்களில் நிறுவப்பட உள்ளது.

அதன் முக்கிய அம்சங்கள்: 

* 24X7 நேரடி கண்காணிப்பு

* 360° வீதியிலும் பல மீட்டர் தூரம் கண்காணிக்கும் திறன்

* எளிதில் அழுத்தக்கூடிய சிவப்பு ஆபத்து பொத்தான்

* எச்சரிக்கை ஒலி மற்றும் உடனடி காவல் அழைப்பு

* ஜிபிஎஸ் மூலம் துல்லிய இடம் கண்காணிப்பு

* உயர் தர கேமரா மற்றும் மைக்ரோபோன்

* பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் காவல்துறை கண்காணிப்பு

ஆபத்தில் உள்ள நபர் அல்லது அருகிலுள்ளவர் இந்த சிவப்பு பொத்தானை அழுத்தினால்:

* காவல்துறைக்கு உடனடி அழைப்பு

* அருகிலுள்ளவர்களுக்கு எச்சரிக்கை ஒலி

* வீடியோ கால் மூலம் நேரடி காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு

* ரோந்து வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைவில் வருகை

* கேமரா பதிவு மூலம் புலனாய்வு மற்றும் நடவடிக்கை

சென்னையின் ரயில் மற்றும் பேருந்து நிலையங்கள். ` வளாகங்கள்.  வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகள் இடங்களில் இது நிறுவப்பட உள்ளது. பூங்காக்கள் உள்ளிட்ட இந்த சாதனம் பெண்கள், குழந்தைகள் மற்றும் அனைத்து பொதுமக்களுக்கும் உயிர் காக்கும் நம்பிக்கையான பாதுகாப்பு தோழராக செயல்படும்”

என்று பதிவிட்டுள்ளது