சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது, அங்கு வரும் இலங்கை கடற்படையினர், அவர்களை கைது செய்வதும், அவர்கள்மீது தாக்குதல் நடத்துவதும் வாடிக்கையாக உள்ளது. இதற்கு முடிவு எடுக்க மத்திய மாநில அரசுகளை மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த மார்ச் 17ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்த ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள்னர். அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மூன்று மீனவர்களையும் கைது செய்து இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
கடந்த மார்ச் 26 ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தகடந்த மார்ச் 26 ஆம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்கள் போது இலங்கை கடற்படையினர் 11 மீனவர்களையும் கைது செய்து இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இந்த பேச்சு வார்த்தைக்கு பின் இலங்கை அரசு 14 மீனவர்களையும் விடுதலை செய்தது. இந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட 14 மீனவர்கள் அனைவரையும் கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் 14 மீனவர்களுக்கு இந்திய தூதரக வாயிலாக சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை விமான நிலையம் வந்த மீனவர்கள் அனைவரையும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊருக்கு தனி வாகனம் மூலம் அழைத்துச் சென்றனர்.