திருநெல்வேலி

ராஜஸ்தான் மற்றும் டெல்லிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்ம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்.

”மதுரையில் இருந்து பகத் கி கோதி செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06067) ஏப்ரல் 21, 2025 அன்று (நாளை) காலை 10.45 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும்.

மறுமார்க்கத்தில் ராஜஸ்தான் பகத் கி கோதியில் இருந்து மதுரை செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06067) ஏப்ரல் 21, 2025 அன்று (நாளை) காலை 5.30 மணிக்கு பகத் கி கோதியில் இருந்து புறப்படும்.

ரயில் அமைப்பு:

12- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 6- ஏசி மூன்று அடுக்கு எகானமி பெட்டிகள் மற்றும் 2- லக்கேஜ் கம் பிரேக் வேன் உள்ளன.

திருநெல்வேலியில் இருந்து டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீனுக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06161) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் 21 ஏப்ரல் 2025 அன்று (நாளை) இரவு 10.15 மணியளவில் புறப்படும்.

ரெயில் அமைப்பு:

20- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் மற்றும் 2- இரண்டாம் வகுப்பு பெட்டிகள் உள்ளன.”

eன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.