சென்னை
இன்று பூந்தமல்லி போரூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.
விரைவில் சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கியமான வழித்தடமான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.
மேலும் பூந்தமல்லி – போரூர் இடையே பல இடங்களில் ரெயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. வரும் டிசம்பரஒ; பூந்தமல்லி- போரூர் இடையே வரும் டிசம்பரில் சேவை தொடங்குகிறது. இதற்கான பணிகள்தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த மாதம் 20ம் தேதி இந்த வழித்தடத்தில் முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த தடத்தில் ஒரு பகுதியாக பூந்தமல்லி – முல்லைத்தோட்டம் இடையே 3 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுள்ள மேம்பால பாதையில் டிரைவர் இல்லாத மெட்ரோயில் இயக்கி சோதனை வெற்றியடைந்தது.
இன்று பூந்தமல்லி – போரூர் தடத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் 2ம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. இந்த மாத இறுதிக்குள் சோனை ஓட்டம் நடத்த சென்னை மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவைக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது