சென்னை: சார்ஜாவில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதற்கு தகுதியோனர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சார்ஜாவில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று தமிழ்நாட்டு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் (ம) நிர்வாக இயக்குநர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஐக்கிய அரபு அமீரகம் சார்ஜாவில் பணிபுரிய Steel Structural Fabricators, CNC Laser cutting machine programmer cum operator, Fork Lift cum JVC Operator, Heavy Bus Driver, Press Toll & Sheet Metal Die maker, CNC Plasma Cutting Machine Programmer cum Operator, Marketing Engineer, Production Engineer, QA/QC Document controller, Industrial Power Electrician, Instrument Technicians (Automation), Diesel Engines and workshop Machinery Maintenance, Split AC / Window AC / CentralAC Technician/ Store keeper ஆகிய பணிகளுக்கான ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
கல்வித்தகுதி என்ன?
Diploma in Mechanical Engineer மற்றும் ITI தேர்ச்சி பெற்று 6 வருட பணி அனுபவத்துடன் 28 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
Steel Structural Fabricators பணிக்கு ரூ.55200 சம்பளம் வழங்கப்படும்.
CNC Laser cutting Machine Programmer cum Operator ரூ.51,750/- ,
Fork Lift Cum JVC Operator ரூ.41,000/-,
Heavy Bus Driver ரூ.60,000/-
Press Toll & Sheet Metal Die maker ரூ.41,400 சம்பளம் வழங்கப்படும்.
எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?
மேலும் CNC Plasma Cutting Machine Programmer cum Operator ரூ.55,200/- Marketing Engineer ரூ.64,400-69,000/- Production Engineer ரூ.64,000, QA/QC Document controller ரூ.63,250/- Industrial Power Electrician ரூ.42,550/- Instrument Technicians (Automation) ரூ.52,900/- Diesel Engines and Workshop Machinery Maintenance ரூ.37,950/- மற்றும் Split AC & Window AC + Central AC Technician/ Storekeeper பணியிடங்களுக்கு ரூ.34500/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
உணவு மற்றும் இருப்பிடம் வேலை அளிப்பவரால் வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்த பின்னர், இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400/- மட்டும் செலுத்தினால் போதும்.
மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவரம் அடங்கிய விண்ணப்பபடிவம்.கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் (Passport) நகலினை 20.04.2025 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இப்பணிகளுக்கான நேர்காணல் 03.05.2025 மற்றும் 04.05.2025 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற உள்ளது.
எனவே, விருப்பம் உள்ளவர்கள் Resume, Passport Original &Copy and Photo ஆகியவற்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு நேரில் அணுகவும்:
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்
(தமிழ்நாடு அரசு நிறுவனம்)
ஒருங்கினைந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்
42. ஆலந்தூர் ரோடு, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி சென்னை -32
கூடுதல் விவரங்களை அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் இணையதளம் www.omomanpower.tn.gov.in
மற்றும் தொலைபேசி எண் 044-22502267,வாட்ஸ் அப் எண் 9566239685 வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.