சென்னை:  முதுபெரும் தலைவர் குமரிஅனந்தன் மறைவு குறித்து, அவரது மகளும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் உருக்கமுடன் இரங்கல் பதிவிட்டுள்ளார். அதில்,  “நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்..” என குறிப்பிட்டுள்ளார்.

93வயதாகும் முதுபெரும் தலைவரான , மூத்த காங்கிரஸ் தலைவர் வயது மூப்பு காரணமாக பல்வேறு நோய்களின் பாதிப்புக்கு உள்ளானார். இதையடுத்து, அவர்  குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்  இயற்கை சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வந்தது. அவரது உடல் கடந்த வாரம் திடீரென மோசமடைந்தது. இதையடுத்து, அவரது மகள் தமிழிசை , அவரை உடனே சென்னைக்கு அழைத்து வந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.  அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில்,  இன்று அதிகாலை  (ஏப்.9) குமரி அனந்தன் சிசிக்கை பலனின்றி உயிரிழந்தார்.  சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழிசை சௌந்தரரஜன் இல்லத்தில் குமரி அனந்தனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குமரின் அனந்தன் மறைவிற்கு அவரது மகளும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை…  தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று….   பெருமையாக . பேச வைத்த என் தந்தை திரு.குமரி அனந்தன் அவர்கள்…  இன்று என் அம்மாவோடு.. இரண்டர கலந்து விட்டார்…

குமரியில்.. ஒரு கிராமத்தில் பிறந்து.. தன் முழு முயற்சியினால்……  அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக… தமிழ் மீது.. தீராத பற்று கொண்டு… தமிழிசை என்ற பெயர் வைத்து… இசை இசை… என்று கூப்பிடும் என் அப்பாவின்… கணீர் குரல்… இன்று காற்றில்.. இசையோடு கலந்து விட்டது….

வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று… சீரான வாழ்க்கை வாழ்ந்தவர்… இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம்… சீராக வாழ்வதைக் கண்டு… பெருமைப்பட்டு.. வாழ்த்திவிட்டு.. எங்களை விட்டு மறைந்திருக்கிறார்… என்றும். .. அவர் பெயர் நிலைத்திருக்கும். தமிழக அரசியலில்.. பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர் இன்று தமிழோடு காற்றில் கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும்….

மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா… நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ… அதை மனதில் கொண்டு… உங்கள் பெயரில்… நாங்கள் செய்வோம் என்று… உறுதியோடு… உங்களை வழி அனுப்புகிறோம்…

உங்கள் வழி உங்கள் வழியில்…… நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல… நாமும் மகிழ்ச்சியாக இருந்து.. மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும்.. என்று உங்கள் ஆசை ஆசையை.. எப்போதும் நிறைவேற்றுவோம்… போய் வாருங்கள் அப்பா தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன்…

நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்….

என  பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.