சென்னை: “வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? மக்கள் வயிறு எரிய வேண்டுமா?” #SadistBJP அரசு என கேஸ்விலை உயர்வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஓராண்டுக்கு பிறகு, நாடு முழுவதும் வீடுகளுக்கான  சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்பட அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்,  வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? மக்கள் வயிறு எரிய வேண்டுமா? என சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா?

“உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்” என்பது, #SadistBJP அரசுக்கு மிகவும் பொருந்தும்!

உலக அளவில் #CrudeOil விலை சரிந்துள்ள நிலையில், #Petrol #Diesel விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே!?

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் #GasCyclinder விலை உயர்வு அமைந்திருக்கிறது. மக்களே…

அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பா.ஜ.க.வின் வழக்கமாகிவிட்டது!

இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது! ஒன்றிய #BJP அரசே…

தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக!

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.