கொல்கத்தா: ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பாக மேற்கு வங்க முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் அனுமதி வழங்கியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சியில் கடந்த 2011 முதல் 2021 வரை கல்வி அமைச்சராக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர் ஆசிரியர் பணிக்கு பணம் பெற்றுக்கொண்டு பணி நியமனங்களை வழங்கியதாகபுகார் எழுந்தது. இதுதொடர்பான விசாரணையில், அவர்மீதான முறைகேடு உறதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் மேற்கு வங்க தொடக்க கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவர் மாணிக் பட்டாச்சார்யா மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு ஆளுநர் ஆனந்த போஸ் அனுமதி வழங்கியுள்ளார்.
பார்த்தா சாட்டர்ஜி தற்போது பெஹலா பஸ்ஸிம் தொகுதி திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவாக உள்ளார். பல கோடி ரூபாய் மதிப்பிலான தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஆட்சேர்ப்பு ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சாட்டர்ஜி 2022 ஆம் ஆண்டு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், அவர் சிறையில் உள்ளார். இருந்தாலும், அவர் தற்போது திரிமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக தொடர்கிறார்.. இவருக்கு ஜாமீன் வழங்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பரில் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
25,000 ஆசிரியர் பணி நியமனங்களை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ஆசிரியர் நியமன ஊழல்: மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை கைது செய்தது அமலாக்கத்துறை
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி பதவி நீக்கம்! மம்தா அதிரடி