சென்னை: சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலான ஹயாத் ஓட்டலின் லிப்ட் அறுந்து விழுந்து ஊழியர் உயிரிழந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலை யில், தனியார் ஓட்டல் தலைமை பொறியாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் அருகில் பிரபல நட்சத்திர விடுதி ஹயாத். உலக புகழ்பெற்ற இந்த நட்சத்திர விடுதியானது. 18 மாடிகள் உயரமானது மற்றும் மொத்தம் 327 அறைகளைக் கொண்டுள்ளது, இதில் 21 சூட்கள் அடங்கும், மேலும் சுமார் 56,000 மீ 2 (600,000 சதுர அடி), பரப்பளவைக் கொண்டுள்ளது, 24 மணி நேர லவுஞ்சான லாபி லவுஞ்ச், ஹோட்டல் ஏட்ரியத்தின் கீழ் உட்புற பசுமையான நிலப்பரப்பின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. ஹோட்டலில் நகரத்தை நோக்கிய வெளிப்புற நீச்சல் குளமும் உள்ளது, மேலும் தனிப்பயனாக்கப்பட்ட கலை நிறுவல்கள் மற்றும் பசுமையான நிலப்பரப்பின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச கலைஞர்களால் உருவாக்கப்பட்ட நாட்டில் பொதுவில் காட்சிப்படுத்தப்பட்ட கலை நிறுவல்களின் மிகப்பெரிய தொகுப்புகளில் ஒன்று இந்த ஹோட்டலில் உள்ளது.
இந்த நட்சத்திர விடுதியின் பின்புறம் உள்ள லிஃப்ட் பழுதடைந்து இருந்ததால், அதை அகற்ற விடுதி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, பெரியமேடு பழைய இரும்பு வியாபாரி அப்துல் காதர் என்பவர், அந்த லிஃப்டை அகற்றுவதற்காக, ஷியாம் சுந்தர்(34), வினோத் உள்ளிட்ட ஊழியர்களை விடுதிக்கு அழைத்து வந்துள்ளார் . அவர்கள் மூலம் லிப்ட் அகற்றும் பணி நடைபெற்று வந்தது. இதில், பழுதடைந்திருந்த அந்த லிப்ட் அறுந்து விழுந்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் உயிரிழந்தார். ஷியாம் சுந்தர் கீழே நின்று கொண்டிருந்தபோது, வினோத் உள்ளிட்டோர், மாடியில் இருந்து லிஃப்ட்டை கீழே இறக்கினர். அப்போது, எதிர்பாராத விதமாக, லிஃப்ட் அறுந்து, கீழே நின்று கொண்டிருந்த ஷியாம் சுந்தர் மீது விழுந்துள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்து வந்த‘ தேனாம்பேட்டை போலீஸார், ஷியாம் சுந்தர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், தனியார் ஓட்டல் தலைமை பொறியாளர் உள்பட 2 பேர் கைது செய்துள்ளனர்.