துரை

துரை உயர்நீதிமன்றம் எச்சில்  இலையில் அங்கபிரதட்சணம் செய்ய தடை விதித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தை பூர்விமாக கொண்ட சதாசிவரின் இயற்பெயர் சிவராமகிருஷ்ணன் ஆகும். பலரிடம் வேதங்களை கற்றுத்தேர்ந்த இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தும், திருமண வாழ்க்கையில் பற்றில்லாத சிவராமகிருஷ்ணன், காடு மலைகளில் அலைந்து திரிந்தார். இவர் பின்னர், துறவியாகி வைசாக சுத்த தசமியன்று நெரூர் காவிரி கரையில் வில்வமரத்தடியில் ஜீவசமாதியனார்.

இந்த தினம் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இவர்ஜீவசமாதி அடைந்ததன் நினைவு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் மே 18-ஆம் தேதி பக்தா்கள் சாப்பிட்ட இலையில் உருண்டு அங்கப்பிரதட்சிணம் செய்து நோ்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இதனால் பிரம்மேந்திரா் சுவாமிகள் சாப்பிட்ட இலையில் பக்தா்கள் உருண்டு அவரது ஆசீா்வாதம் பெறுவதாக ஐதீகம்.

இந்த எச்சில் இலைகள் அனைத்து சமுதாயத்தினரும் பயன்படுத்திய இலை இல்லை எனவும், எனவே இந்த நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்கக் கூடாது எனவும் கூறி கடந்த 2014-இல் கரூரைச் சோ்ந்த ஒருவர் தொடா்ந்த வழக்கையடுத்து 10 ஆண்டுகளாக எச்சில் இலையில் உருளும் நிகழ்வானது நடைபெறாமல் இருந்தது.

இந்த பாரம்பரிய சடங்கடை மீண்டும் நடத்த உத்தரவிடக்கோரி தொடர்ந்த வாக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு நீதிபதி அமர்வு, புனித நோ்த்திக் கடனை நடத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது, கடந்தாண்டு எச்சில் இலை அங்கபிரதட்சணம் நிகழ்வு நடைபெற்றது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு, அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்டோர் தரப்பில் மேல் முறையீடு செய்யபட்டது. இந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில் எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வது சுகாதாரத்துக்கும் மனித மாண்புக்கும் உகந்தது அல்ல என்றும், ஏற்கெனவே இதுபோன்ற நிகழ்வுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது என்றுதெரிவித்து, இதுபோன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.