புதுக்கோட்டை
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு விசாரணை வரும் 24 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா தாக்கல் செய்த மனுவும், ஆளுநரின் ஒப்புதல் பெறாமல் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தள்ளுபடி செய்யக்கோரி விஜயபாஸ்கர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் இதே நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடந்த போது விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜராகவில்லை. ஆனால் அவர்களது தரப்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடினர். பிறகு விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.