சென்னை
அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகம் இரு மொஇ கொள்கையையே விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எக்ஸ் வலைத்தளத்தில்,
”மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களே…
தமிழகத்தில் 1.09 கோடி மாணவர்கள் 58,779 பள்ளிகளில் மாநில பாடத்திட்ட கல்வியை தேர்வு செய்துள்ளனர். 1,635 சிபிஎஸ்இ பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே மும்மொழியை படிக்கின்றனர். 3-வது மொழியை படிக்க அவசியம் இருந்தால், ஏன் இவ்வளவு பேர் மாநில பாடத்திட்டத்தை தேர்வு செய்துள்ளனர். ? தமிழ் என்பது மொழி மட்டுமல்ல, அது எங்களின் ஆணி வேரோடு ஒன்றாக கலந்ததும் கூட.
தமிழகத்தின் கல்விமுறை ஏற்கனவே சிறந்த தொழில்முனைவோர், சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கி வருகிறது. சிறப்பாக உள்ள தமிழக கல்விமுறையை தேசிய கல்விக் கொள்கை சீர்குலைக்கிறது. ஆங்கில வழிப் பள்ளிகளில் கூட, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவரும் தமிழை ஒரு பாடமாகப் படித்து அதில் திறமையானவர்கள். நமது பெருமைக்கு தமிழ், உலக வழிகாட்டியாக ஆங்கிலம் நமது முன்னேற்றம் மற்றும் சமத்துவத்திற்கான பாதை.
மாணவர்கள் ஏற்கனவே வலுவான இருமொழி அடித்தளத்துடன் சிறந்து விளங்கும்போது, தமிழகத்துக்கு கட்டாய 3-ம் மொழி தேவையில்லை. இருமொழிக் கொள்கையையே தமிழகம் விரும்புகிறது. தமிழகத்தின் கல்வி முறை சிறப்பாக உள்ளது. தேசிய கல்விக்கொள்கையில் தமிழகத்தின் நிலைப்பாட்டை விமர்சிப்பது தவறான வழிநடத்துதலாகும்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழக பாடத்திட்டம் மிகச் சிறந்த பலனை அளித்துள்ளது. உடைந்ததை ஒட்ட வைக்க நினைக்காதீர்கள்; நன்றாக செயல்படும் தமிழ்நாட்டின் கல்வி அமைப்பை மாற்ற வேண்டாம். இது மொழி பற்றியது மட்டுமல்ல – முடிவுகளை வழங்கும் கல்வி முறையைப் பாதுகாப்பது பற்றியது. மாணவர்களுக்கு எது சிறந்தது என்பதில் தமிழ்நாடு சமரசம் செய்யாது.”
என்று பதிவிட்டுள்ளார்.