டெல்லி: திமுக எம்பிக்கள்  குறித்து  அவதூறாக பேசியதற்கு 100 முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். அதே வேளையில்  சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்டவர்கள் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்” எனப் பேசினார்.

மொழி திணிப்பு குறித்த திமுகவின் வெற்று வார்த்தைகள் அவர்களின் தோல்வியை மறைக்க முடியாது. அவர்களின் நிகழ்ச்சி நிரல் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை விலையாகக் கொடுத்து தெளிவான அரசியல் மற்றும் அதிகாரத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் நேற்று பேசிய திமுக எம்பிக்கள் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். புதிய கல்வி கொள்கை திட்டத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்றும் மாறாது என தெரிவித்திருந்தனர். இதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “புதிய தேசிய கல்விக்கொள்கை பற்றிய சரியான புரிதல் தமிழ்நாட்டிற்கு இல்லை. பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர்வதாக தமிழ்நாடு கூறிய நிலையில் திடீரென நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? தேசியக் கல்விக் கொள்கை திட்டத்தில் கையெழுத்திட தமிழ்நாடு முன்வந்தபோது சூப்பர் முதலமைச்சர் அதனைத் தடுத்துவிட்டார். தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலத்தை தமிழ்நாடு அரசு வஞ்சிக்கிறது” என்று பேசினார்.

மேலும் “திமுகவினர் அநாகரீகமானவர்கள், ஜனநாயகம் இல்லாதவர்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களிடம் அவர்கள் நேர்மையாக இல்லை” என்றுப் பேசினார்.

இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மத்திய அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்டனர். மத்திய அமைச்சர் பேசியது வருத்தமளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.

இதையடுத்து தான் பேசியது புண்படுத்தியிருந்தால் அதனை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். தொடர்ந்து மத்திய பேச்சுக்கு பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தமிழ்நாடு எம்பிக்களின் மனம் புண்பட்டிருந்தால் 100 முறை மன்னிப்பு கேட்கத் தயார் என இன்று மாநிலங்களவையில் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இன்று மாநிலங்களவையில் பேசிய அவர், திருக்குறளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிப்பெயர்க்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டம் தொடர்பாக தலைமைச்செயலர் கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதில், பிஎம்ஸ்ரீ பள்ளிகளை நிறுவ தமிழக அரசு ஆர்வமாக இருக்கிறது எனக்கூறியிருந்தார்.

மாநில அரசுகளுடன் ஆலோசித்த பிறகே புதிய தேசிய கல்விக்கொள்கை இறுதி செய்யப்பட்டது. 1963 ல் கொண்டு வரப்பட்ட மும்மொழிக் கொள்கைக்கும், தற்போதைய மும்மொழிக் கொள்கைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. உலகத்தின் தேவையை கருத்தில் கொண்டு தான் மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்பட்டது. 5ம் வகுப்பு வரை அந்த மாநிலத்தின் மொழியில் தான் கல்வி கற்பிக்க வேண்டும் என கல்விக்கொள்கையில் கூறப்பட்டு உள்ளது.

தமிழ் மொழியை கற்க விரும்புகிறேன். தமிழ் மொழி அனைவருக்கும் பொதுவானது. பிரதமர் மோடி அரசு தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் விரோதமானது அல்ல. எந்த மொழியையும் நாங்கள் திணிக்கவில்லை. தி.மு.க., எம்.பி.,க்களின் வலி எனக்கு புரிகிறது. என்னுடைய பேச்சு யாரையும் புண்படுத்தி இருந்தால் 100 முறை மன்னிப்பு கேட்டு தயார். ஆந்திராவில் 10 மொழிகளை கற்பிக்கத் தயார் என சந்திரபாபு கூறியுள்ளார். எங்களுக்கு இரு மொழியே போதும் எனக்கூறுபவர்களின் அரசுப் பள்ளிகளில் தமிழ் படிப்போர் எண்ணிக்கை குறைந்துவிட்டனர்.

தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவை எப்படி நடத்தினீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என யாரும் பாடம் எடுக்க வேண்டாம். தமிழகத்தில் உள்ள 1500 சிறுபான்மையின பள்ளிகளில் 900 பள்ளிகளில் மும்மொழி கற்றுத்தரப்படுகிறது. மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளும் மும்மொளிகளில் ஒன்றாக கற்பிக்கப்படுகிறது. நாமக்கல்லைச் சேர்ந்த பெண்ணிடம் பேசிய போது ஹிந்தி கற்க ஆர்வமாக உள்ளதாக கூறினார். இது தான் புதிய தமிழகம்.

ஹிந்தி, சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என எங்கேயும் கட்டாயப்படுத்தவில்லை. இந்தியாவின் வரலாற்றை பற்றி பெருமிதம் கொள்ளாதவர்களை என்ன செய்வது. தி.மு.க.,வினர் தனி உலகில் வாழலாம். ஆனால், அதுதான் உண்மை. என்னை நீங்கள் முட்டாள் எனக்கூற முடியாது. தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை அவர்கள் தொடரட்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

“எனது தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர். நான் தமிழகத்தின் மைந்தன். யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் 100 முறை மன்னிப்பு கேட்கிறேன். யார் மனதையும் புண்படுத்த வேண்டுமென்பது என் நோக்கம் இல்லை. யாருக்கான நிதியையும் நிறுத்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. கடந்த ஓராண்டுக்கு முன்பு 5 முறை தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன். எனக்கு தமிழக தலைமை செயலாளர் ஒரு பதில் கடிதம் அனுப்பினார். தமிழகத்தில் உயர்தர கல்வியை தர தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் எழுதி இருந்தார்.

இந்த அரசு தமிழுக்கு எதிரானது இல்லை. திருக்குறளை பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்க இந்த அரசு தான் நடவடிக்கை எடுத்து உள்ளது. தமிழ் தான் உலகின் மூத்த மொழி என்பதை மத்திய அரசு பல இடங்களில் கூறியுள்ளது என தெரிவித்தார்.

இதைடுத்து மத்திய இணையமைச்சர் எல்முருகன் பேசும்போது,  1967 காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியற்ற நாடு என்பதால், இல்லாத பலவற்றைக் கூறியும், நிகழாத அவதூறுகளைப் பரப்பியும் ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று பாராளுமன்றத்தில் நொடிக்கு நொடி என்ன நிகழ்கிறது, எது பேசப்படுகிறது என்று மக்கள் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தும் பொய் பரப்புவது, அப்பட்டமாக மக்களை ஏமாற்றுகின்ற செயலாகும்.

புதிய தேசிய கல்விக் கொள்கை என்பது, தேசத்தை கல்வி சார்ந்த நிலையில் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லக் கூடியது என்பதை உணர்ந்து, தென்மாநிலங்களும் கூட ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ள நிலையில், தமிழக அரசுப்பள்ளி மாணவர்களின் அடிப்படைக் கல்வி மீதான அக்கறையற்ற இந்த திமுக அரசு, கேமராவுக்குப் பின்னால் ஒரு நாடகமும், கேமரா முன்பு ஒரு நாடகமும் அரங்கேற்றி வருவது, துளியும் ஏற்கத்தகாத செயலாகும்.

மேலும், புதிய கல்விக் கொள்கையின் எந்தவொரு இடத்திலும் இந்தி திணிக்கப்படவில்லை என்றும், மாறாக, மாநிலங்களின் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் தெளிவுபடுத்தி வரும் வேளையில், எதன் அடிப்படையில் தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்தி திணிக்கப்படுவதாக பொய்யைக் கூறுகிறார். “ஒரு பொய், மீண்டும் மீண்டும் திணிக்கப்பட்டால் உண்மையாகிவிடும்” என்பதன் அடிப்படையிலா?

தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களே, தங்களது வலுவற்ற ஆட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களிடத்தில், உங்களுடைய குடும்பத்தையும், கட்சியையும் காப்பாற்றிக் கொள்வதற்காக நாளொரு பொய் பரப்புவதை தமிழக மக்கள் நேரலையில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆட்சியும், அதிகாரமும் நிரந்தரமல்ல என்பதை வெகுவிரைவில் மக்கள் உணர்த்துவார்கள் என்றார்.

இதுகுறித்து மத்திய கல்விஅமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று, திமுக எம்.பி.க்கள் மற்றும் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலினும், பிரதமர்-எஸ்.ஆர்.ஐ பள்ளிகளை நிறுவுவதற்கு தமிழ்நாடு ஒப்புதல் அளித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தை நான் தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டினர்.

நாடாளுமன்றத்தில் நான் வெளியிட்ட அறிக்கைக்கு நான் ஆதரவாக இருக்கிறேன், மேலும் மார்ச் 15, 2024 தேதியிட்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் ஒப்புதல் கடிதத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.

திமுக எம்.பி.க்களும் மாண்புமிகு முதல்வரும் எவ்வளவு வேண்டுமானாலும் பொய்களை அடுக்கி வைக்கலாம், ஆனால் உண்மை சரியும்போது தட்டிக் கேட்பதில்லை. மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி தமிழக மக்களுக்கு நிறைய பதில் சொல்ல வேண்டும். மொழிப் பிரச்சினையை திசைதிருப்பும் தந்திரமாகப் பேசுவதும், அவர்களின் வசதிக்கேற்ப உண்மைகளை மறுப்பதும் அவர்களின் ஆட்சி மற்றும் நலப் பற்றாக்குறையைக் காப்பாற்றாது.

NEP மீதான இந்த திடீர் நிலைப்பாடு ஏன்? நிச்சயமாக அரசியல் பிரவுனிகளுக்காகவும், திமுகவின் அரசியல் செல்வத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்காகவும். திமுகவின் இந்த பிற்போக்குத்தனமான அரசியல் தமிழ்நாட்டின் பிரகாசமான எதிர்காலத்திற்கும் அதன் மாணவர்களுக்கும் பெரும் அவமானமாகும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம் என்று நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அரசியல் ஆதாயங்களை விட தமிழ்நாட்டில் உள்ள நமது குழந்தைகளின் நலனுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

மொழித் திணிப்பு மற்றும் தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கை குறித்த திமுகவின் சமீபத்திய கூச்சல் அவர்களின் பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்துகிறது. தேசிய கல்விக் கொள்கை 2020க்கான எதிர்ப்பு, தமிழ்ப் பெருமை, மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் எந்தத் தொடர்பும் இல்லை, மாறாக அரசியல் ஆதாயங்களைப் பெறுவதில்தான் உள்ளது.

தமிழ் மொழியை மேம்படுத்த திமுக போராடுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால், தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் இலக்கியச் சின்னங்களை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் அவர்கள் சிறிதும் செய்யவில்லை.

UDISE+ தரவுகளின்படி, தமிழ் வழியில் சேர்க்கை 2018-19ல் 65.87 லட்சத்திலிருந்து 2023-24ல் 46.83 லட்சமாகக் குறைந்துள்ளது, ஐந்து ஆண்டுகளில் 19.05 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் குறைந்துள்ளனர்.

📊 67% மாணவர்கள் இப்போது ஆங்கில வழியில் பள்ளிகளில் படிக்கின்றனர், அதே நேரத்தில் தமிழ் வழியில் சேர்க்கை 54% (2018-19) இலிருந்து 36% (2023-24) ஆகக் குறைந்துள்ளது.

📈 அரசுப் பள்ளிகளில், ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் ஐந்து ஆண்டுகளில் 3.4 லட்சத்திலிருந்து 17.7 லட்சமாக 5 மடங்கு உயர்ந்துள்ளது.

📉 அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 7.3 லட்சமாகக் குறைந்துள்ளது, இது விருப்பத்தில் ஆழமான மாற்றத்தை பிரதிபலிக்கிறது.

இந்த எண்கள் உண்மையான கதையை வெளிப்படுத்துகின்றன – தமிழ் வழியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இது மொழி விருப்பத்தில் ஏற்பட்ட மாற்றம் மட்டுமல்ல, காலனித்துவ மனநிலையும் இதில் உள்ளது. ஆங்கிலம் அந்தஸ்து மற்றும் வேலைகளுக்கான நுழைவாயிலாகக் கருதப்படுகிறது, இந்திய மொழிகள் பின்தங்கிய நிலையின் அடையாளமாகக் காணப்படுகின்றன.

தாய்மொழியில் கல்வியை ஊக்குவிப்பது NEP 2020 இன் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். இளம் மனங்களில் விமர்சன சிந்தனையை வளர்ப்பதற்கும் இந்தியாவின் மக்கள்தொகையின் முழு திறனையும் வெளிக்கொணர்வதற்கும் இது உறுதியான பாதைகளில் ஒன்றாகும்.

NEP மற்றும் மொழி திணிப்பு குறித்த திமுகவின் வெற்று வார்த்தைகள் அவர்களின் தோல்வியை மறைக்க முடியாது. அவர்களின் நிகழ்ச்சி நிரல் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை விலையாகக் கொடுத்து தெளிவான அரசியல் மற்றும் அதிகாரத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.