கரூர்: கருர் மாவட்டத்தில் பட்டப்பகலில் சினிமா பாணியில் கல்லூரி மாணவி ஒரு கும்பலால் ஆம்னி வேனில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொகுதியான, கரூரில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி வேனில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம் ஈசநத்தத்தை அடுத்த அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த  3ம் ஆண்டு கல்லூரி  மாணவி,  அந்த பகுதியான, தாந்தோன்றிமலையில் உள்ள அரசு கலை கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல் இன்று வீட்டிலிருந்து கரூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் ஏறி பயணம் செய்தார். இவர் கல்லுரிக்கு செல்லும் வகையில்,  பொன்நகர் பேருந்து நிறுத்ததில் இறங்கி,  அந்த மாணவி சக மாணவிகள் 3 பேருடன் கல்லூரி நோக்கி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு  திடீரென ஆம்னி வேனுடன் தயாராக இருந்த இளைஞர், அந்த மாணவியை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி கடத்திச் சென்றதாக சொல்லப்படுகிறது.  இதைக்கண்ட கூட வந்த மாணவிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து அக்கம் பக்கம் இருந்தவர்கள், அந்த வேனை நிறுத்த முயன்றி நிலையில், அந்த வேன் வேகமாக சென்றுவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த  போலீசார், அந்த மாணவியின் தோழிகளிடம் விசாரித்தனர்.

விசாரணையில்,  அந்த மாணவி ஒருவரை காதலித்ததாகவும், அந்த இளைஞர் மாணவியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாகவும், அதனை நீக்கும் படி கல்லூரி மாணவியின் குடும்பத்தினர் அந்த இளைஞரை திட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அந்த இளைஞர் தனது குடும்பத்தினருடன் வந்து கல்லூரி மாணவியை கடத்தியதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சக மாணவிகள் வேனின் பதிவு எண்ணை கொடுத்ததன் அடிப்படையில் போலீசார் மாவட்ட எல்லைகள், காவல் நிலைய எல்லைகளில் செக்போஸ்ட்கள் அமைத்து மாணவியை தேடி வருகின்றனர்.

[youtube-feed feed=1]