சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை (மார்ச் 9ந்தேதி)  புறநகர் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும், அதற்காக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை வரும் 9ம் தேதி ஞாயிறன்று காலை 5.10 முதல் மாலை 4.10 வரை ரத்து செய்யப்படும் .  அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் ரெயில்கள் தாம்பரம் வரை இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் வசதிக்காக, தாம்பரம் – கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.