திருவாரூர்
மாணவர்களை வீட்டுக்கு அழைத்து பாலியல் சீண்டல் செய்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்ட்டுள்ளார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவாரூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வரும் திருவாரூர் மடப்புரம் பகுதியை சேர்ந்த சீனிவாசன்(வயது 52. 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2 பேரை விடைத்தாள் திருத்துவதற்கு உதவி செய்ய வேண்டும் என கூறி தனது வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.
அங்கு சீனிவாசன் அந்த மாணவர்களின் உதட்டில் முத்தமிடுவது, உடலை தடவுவது உள்பட பல்வேறு பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். மனவேதனை அடைந்த மாணவர்கள் நடந்த சம்பவம் குறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் பெற்றோர், பள்ளிக்கு நேரடியாக வந்து ஆசிரியர் நடந்து கொண்டது குறித்து முறையிட்டனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவரின் உறவினர் ஒருவர் 1098 என்ற தொலைபேசி எண் மூலமாக குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தொடர்பு கொண்டு அளிட்த புகாரின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தினர்.
ஆசிரியர், மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. எனவே திருவாரூர் அனைத்து மகளிர் போலீசில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் புகார் கொடுத்து போலீசார், ஆசிரியர் சீனிவாசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அந்த பகுதியில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.