சென்னை: கல்விதான் உயிரினும் மேலானது  என பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தனது தாய் உயிரிழந்த நிலையிலும், தேர்வு எழுத சென்ற பிளஸ்2  மாணவனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது.  தமிழகத்தில் இத்தேர்வினை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவர்கள் எழுதுகின்றனர்.  முதல்நாள் தேர்வான நேற்று, மாணவர் சுனில்குமார்  தனது தாய் உயிரிழந்த நிலையிலும், அவரிடம் ஆசிர்வாதம் பெற்று பிளஸ்2 தேர்வினை எழுதிவிட்டு வந்து இறுதிச்சடங்கை செய்தார். மாணவின் நடவடிக்கை  பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் சமூக வலைதளங்களிலும் பேசும்பொருளாக மாறியது.

இதனை சுட்டிக்காட்டி சில புகைப்படங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

இதுதான் தமிழ்ச் சமூகம்! கல்விதான் நம் உயிரினும் மேலானது!

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!.

என்று கூறியுள்ளார்.