பெலிசே

ரிபியன் நாடான பெலிசேவில் 3 அமெரிக்க பெண்கள் கடற்கரை சொகுசு விடுதியில்  மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் மசாசூட்ஸ் நகரை சேர்ந்த 3 இளம்பெண்தோழிகள் கரீபியன் தீவு நாடான பெலிசேவுக்கு சுற்றுலா சென்றனர். குட்டி தீவு நாடான அதன் கடற்கரை நகரான சான் பெட்ரோவில் உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் மூன்று பேரும் ஓர் அறையை எடுத்து தங்கியிருந்தனர்.

திடீரென அவர்கள் மூன்று பேரும் ஓட்டல் அறையில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் உஇர் இழதுள்ளனர்,  இந்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பெண்களின் உடலையும் மீட்டனர்.

அவர்கள் தங்கியிருந்த  அறையில் இருந்த காலி மதுபாட்டில்கள், போதை மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்கள் மூன்று பேரும் அதீத போதை காரணமாக இறந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.