பாட்னா

பாஜகவை சேர்ந்த 7 அமைச்சர்கள் பீகார் மாநில நிதிஷ்குமார் அரசில் பதவியேற்றுள்ளனர்.

நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜனதா கூட்டணி அரசு பீகார் மாநிலத்தில் நடந்து வருகிறது. சென்ற ஆண்டு ஜனவரி மாதம், பா.ஜனதாவுடன் நிதிஷ்குமார் கைகோர்த்த நிலையில், பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள் அமைச்சரவையில் சேர்ந்தனர்.

நேற்று நிதிஷ்குமார் அமைச்சரவை விஸ்தரிக்கப்பட்டு புதிதாக 7 அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர். ஆளுநர்ர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில், கவர்னர் ஆரிப் முகமது கான், 7 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.இந்த  7 பேரும் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

பாஜகவின் ஜிபேஷ் குமார், சஞ்சய் சரோகி, சுனில்குமார், ராஜுகுமார் சிங், கிருஷ்ணகுமார் மந்து, விஜய்குமார் மண்டல், மோதிலால் பிரசாத் ஆகியோர் புதிய மந்திரிகள் ஆவர்.  தற்போது பீகாரில், அமைச்சர்கள்கள் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. 243 பேர் கொண்ட சட்டசபையில், இதுதான் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அமைசர்கள் எண்ணிக்கை ஆகும்.