கோவை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கோவை அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாக, கோவை வடக்கு தொகுதி அ.தி.மு.க., எம் எல்.ஏ., அம்மன் அர்ஜுனன், அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

அதிமுக எம்எல்ஏ வேலுமணியின் ஆதரவாளரும்,  அதிமுக மாவட்ட செயலாளரும்,   கோவை வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுமான அம்மன் அர்ஜுனன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அம்மன் அர்ஜுனன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருகிறது.

கோவை உக்கடம் பகுதியில் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் வீட்டிற்கு இன்று காலை சென்ற  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்  அங்கு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிமுகவினர் அங்கு குவிந்து வருகின்றனர். இதையொட்டி, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது,