சென்னை

மூன்றாம் வகுப்பு மாணவனை அடித்த ஒரு இந்தி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய அரசின் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், தமிழகத்துக்கு கொடுக்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி தொகையை விடுவிக்க மாட்டோம் என்று தெரிவித்ததற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இதற்கு எதிராக பாஜகவை தவிர்த்து அத்தனை கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பத்மலட்சுமி (வயது38 )என்பவர் இந்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப் பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இங்கு 3வது வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு இந்தி கற்பதிலும், படிப்பதிலும் சில சிக்கல்கள் இருந்திருக்கின்றன.

அந்த3வது வகுப்பு மாணவரை இந்தியில் கவிதை சொல்லுமாறு பத்மலட்சுமி கூறி இருக்கிறார். அந்த மாணவர் இந்தியில் கவிதை சொல்ல முடியாமல் திணறியதாக கூறப்படுகிறது. எனவே கோபடைந்த அந்த ஆசிரியை மாணவரை கடுமையாக அடித்து பள்ளிக்குள் விடமாட்டேன் என்றும் மிரட்டி தொடர்ந்து அடித்துள்ளார்.

அந்த மாணவரின் பெற்றோர் இந்தி ஆசிரியை மீது பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் இந்தி ஆசிரியை பத்மலட்சுமி சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது