சென்னை
திமுக எம் பி கனிமொழி புதிய கல்விக் கொள்கைதான் பாஜக அர்சுப் தற்போதைய ஆயுதம் என விமர்சித்துள்ளர்.

தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எக்ஸ் வலைதளத்தில்,
”தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான், கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என்று மத்திய அமைச்சரே பேசுவது வெளிப்படையான மிரட்டல். 40 லட்சம் தமிழக மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பா.ஜ.க.வின் அரசியலா..?
அனுதினமும் எந்தெந்த வழிகளில் இந்தியைத் திணிக்கலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் பா.ஜ.க. அரசின் தற்போதைய ஆயுதம் NEP 2020.
இந்த உரிமை மீறலை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் செயல்களை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால், தமிழ் மக்களின் போராட்ட குணத்திற்கு பதில் சொல்ல நேரிடும்.”
எனப் பதிவிட்டுள்ளார்.