கோவை: பிப்ரவரி 14ந்தேதியான இன்று  கோவை குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு, பாஜக சார்பில்  மவுன அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

58 பேரை கொண்ட கோவை குண்டுவெடிப்பு நிகழ்ந்த 27-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டிடி,   கோவையில்  இந்து அமைப்புகள் சார்பில்  இன்று மாலை ஆர்ப்பாட்டம், ஊர்வலம், மவுன அஞ்சலி நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

1998ம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் நாள் தமிழ்நாடு, கோயம்புத்தூர் நகரில்  அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. இந்த கொடூர குண்டுவெடிப்பில், 5 ஆண்கள், 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 46 பேர்  கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பை நடத்தியது, கேரளாவைச் சேர்ந்த  மக்கள் ஜனநாயக கட்சி என்ற பெயரில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வந்த அக்கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி மற்றும் அவரது குழுவை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கின் விசாரணை மார்ச் 7, 2002 அன்று தொடங்கியது மற்றும் 1,300 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். குண்டுவெடிப்புகளின் மூளையாக செயல்பட்ட எஸ்.ஏ. பாஷா, 1998 பிப்ரவரி 14 அன்று அங்கு தொடர்ச்சியான குண்டுவெடிப்புகளைத் தூண்டுவதற்கு குற்றவியல் சதித்திட்டத்தை தீட்டியதாகக் கண்டறி யப்பட்டு, 12 பேருடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். அவர் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில்,  கொடூர குற்றவாளியை அவரது மரண ஊர்வலம் பிரமாண்டமாக காவல்துறை பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. இது கோவை பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  26 பேரின் உயிரை பலிவாங்கிய குற்றவாளிக்கு ஏன் காவல்துறை பாதுகாப்பு, ஏன் இறுதி ஊர்வலம் என சமூக வலைதளங்களிலும், எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்தன.

இந்த நிலையில், கோவையில், இன்று  குண்டுவெடிப்பு நிகழ்ந்த 27-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவையில்  இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், மவுன அஞ்சலி நிகழ்ச்சிகள் நடக்கிறது.

கோவை ஆர்.எஸ்.புரம் தபால்நிலையம் அருகே குண்டுவெடிப்பில் பலியான 58 பேரின் படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது. நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் பங்கேற்று மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளனர்.

மேலும் விசுவஇந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.

இதன் காரணமாக கோவை ஆர்.எஸ்.புரம் உள்பட மாவட்டம் முழுவதும் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோவை மாநகரில் மட்டும் 2,400 போலீசாரும், புறநகரில் 2 ஆயிரம் போலீசாரும் என மொத்தம் 4,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கோவை நகரில் துணை கமிஷனர்கள் தலைமையில் உதவி கமிஷனர்கள், டி.எஸ்.பி.க்கள், கமாண்டோ போலீசார், அதிவிரைவுப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதுதவிர லாட்ஜ், ஓட்டல்கள், பஸ்நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மார்க்கெட், சினிமா தியேட்டர் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர்.

சமூக விரோதிகள் ஊடுவலை தடுக்கும் வகையில் கோவை-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் விடிய, விடிய வாகன சோதனையும் நடத்தப்பட்டு உள்ளது.

46பேரை பலி கொண்ட கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி: ‘அல் உம்மா’ தலைவர் பாஷா காலமானார்…

1998 கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி அப்துல் நாசர் மதானி கவலைக்கிடம்….

தீவிரவாதிகளுக்குத் துணைபோகிறது திமுக அரசு! கோவையில் நடந்த பேரணியில் அண்ணாமலை குற்றச்சாட்டு